பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-12-28 06:29 GMT

 

கோபியில் வாஸ்து நகருக்கு அருகே உள்ள சக்தி சாந்தி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. காலையிலும், மாலையிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பூங்காவில் உள்ள புற்கள் செடிபோல் உயரமாக வளர்ந்துவிட்டன. இதனால் சிறுவர்களால் விளையாட முடியவில்லை. மேலும் விஷ பூச்சிகளும் செடி மறைவில் பதுங்கும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உள்ள புற்களை வெட்டி சீரமைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்