புதருக்குள் பூங்கா

Update: 2022-10-26 16:19 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சி மெயின் ரோட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பூங்காவில் நடை பயிற்சி, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. எனவே பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வருவார்களா என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

-மகாலட்சுமி, பச்சுடையாம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்