சமுதாயகூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-14 10:33 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் நலன் கருதி சமுதாய கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சமுதாய கூடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி கட்டிடத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் சமுதாயகூட கட்டிடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள சமுதாய கூடத்தை ,இடித்து அகற்றிவிட்டு, புதிய சமுதாய கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்