பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2022-08-24 06:37 GMT


கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா (6-வது வார்டு) உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் வேலி முட்கள் பல அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. இந்த வேலி முட்களின் கீழே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காவாறு பராமரிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்