மகளிர் கூட்ட கட்டிடம் சேதம்

Update: 2023-08-30 17:22 GMT

நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகில் மகளிர் குழுக்கள் கூட்டம் நடத்தவும், மகளிர் சுய உதவி குழுக்கள் வளர்ச்சிக்காக அரசால் ரூ.15 லட்சத்தில் 2002-03-ம் ஆண்டில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தக் கட்டிடத்தை மகளிர் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் சுவற்றில் ெபண்களை தாக்கி தகாத வார்த்தையால் எழுதி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துகளை அழித்து புதிய வர்ணம் பூச வேண்டும். மேலும் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

-அண்ணாதுரை, நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்