திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கும், படித்த இளைஞர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள் என அனைவரும் பரதராமி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஆரணி-திமிரி பிரதான சாலையில் ஒரு மரத்தின் கீழே காத்திருந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். எனவே பரதராமி கூட்ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், திமிரி.