பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

Update: 2022-11-02 16:03 GMT

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். அங்கு வேலூர், திருப்பத்தூர் மார்க்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகன், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்