முட்புதர்களை அகற்றுவார்களா?

Update: 2023-01-08 17:13 GMT

வாலாஜாவில் இருந்து சோளிங்கர், அம்மூர் பிரியும் இடத்தில் சாலை ஓரம் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் முன்னால் செல்லும் வாகனம், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. பார்வை குறைவான வளைவு என்பதால், அவ்வப்போது இப்பகுதிகளில் விபத்துகள் நடக்கிறது. எனவே முட்புதர்களை அகற்றி, போக்குவரத்துக்கான இடையூறை சரி செய்வார்களா?

-சத்தியராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்