அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் புதுமேட்டூர் பகுதியில் சாலையோரம் மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளிக்கூட வாகனங்களுக்கு மதுப்பிரியர்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் மதுக்கடையை வாகன போக்குவரத்து இல்லாத இடத்தில் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.