வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் கண்டு கொள்வது இல்லை. எனவே பூங்குளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பார்களா?
-செல்வராஜ், ஆலங்காயம்.