பராமரிப்பின்றி பாழாகும் தியாகிகள் நினைவுத்தூண்

Update: 2026-09-13 19:57 GMT

அரக்கோணம் புதிய பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள, முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனால் திறந்து வைக்கப்பட்ட அரக்கோணம் தாலுகா சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுத்தூண், தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. நினைவுத்தூணை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் வளர்ந்து காணப்படுகிறது. தூணும் பழுதடைந்து வருகிறது. மேலும் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள ராஜாஜி சிலையில் ஊன்று கோலுடன் இருந்த ஒரு பக்க கை உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், அரக்கோணம்.

மேலும் செய்திகள்