ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் ஒரு தனியார் வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட கிளை நூலகக் கட்டிடம் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளாக ஆம்பூர் பைபாஸ் சாலை, நேதாஜி சாலை ஆகிய இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது தொலைதூரமும் ஒதுக்குப்புறமுமான பேபி காலனியில் உள்ள அரசு பள்ளியின் மாடியில் நூலகம் செயல்பட்டு வருகிறது. ஆம்பூர் நகரின் மையப்பகுதியான நேதாஜி சாலை, கிருஷ்ணாபுரத்தில் நிலையான கட்டமைப்புடன் கூடிய நவீன நூலக வளாகத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரபீக் அஹ்மத், ஆம்பூர்.