பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்

Update: 2026-09-13 19:54 GMT

சோளிங்கர் பெரிய ஏரி கடைவாசல் பகுதியில் கருங்கற்களால் கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது. அந்தப் பாலம் வழியாக சோளிங்கரில் இருந்து பொன்னை, வள்ளிமலை, வேலூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சோளிங்கர் நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கும் செல்லலாம். மேம்பாலத்தின் இருபுற பக்கவாட்டு பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் கட்டுமானம் பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், சோளிங்கர்.

மேலும் செய்திகள்