வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நெருக்கடியான இடங்களின் உள்ளே புகுந்து செல்லும் மாடுகள் மனிதர்களை உரசி செல்கின்றன. லாங்கு பஜாரில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை தனது உடலால் தள்ளி விட்டதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. எனவே மார்க்கெட்டில் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வேலூர்.