ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட்டுச்சாலையில் இருந்து ஏராளமான கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயிகள், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் வாலாஜா, ஆற்காடு, வேலூர், சோளிங்கர் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மருதாளம் கூட்டுச்சாலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களுக்கு நிழற்குடை, இருக்கை வசதிகள் இல்லை. அவர்கள் மழை, வெயில் காலத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மருதாலம் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, மருதாலம்.