ஆரணி கொசப்பாளையம் பாதர் சுபேதார் தெரு, சீனிவாசன் தெரு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளன. ஓட்டுவீடுகளில் அமர்ந்து ஓடுகளை பிரித்து வீசுகின்றன. வீட்டு மின் இணைப்பு, கேபிள் ஒயர் ஆகியவற்றை தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த ஆரணி நகராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்குமா?
-ராஜமாணிக்கம், ஆரணி.