சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ரோட்டில் காந்தி நகர் பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் மண்ணை மட்டும் போட்டு குழியை மூடிவிட்டு சென்று விட்டார்கள். ஆனால் அதன்மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்தால் அந்த வழியாக வரும் வாகனங்கள் குழிக்குள் சிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.