பயணிகள் நிழற்குடை

Update: 2026-09-13 18:21 GMT

அத்தாணி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் அத்தாணியில் இருந்து அந்தியூர், கோபி செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். அங்கிருக்கும் கடைகளின் முன்னால் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் மிகவும் அல்லல்படுகின்றனர். எனவே அத்தாணி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்