குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள அரசு பயணியர் மாளிகை, முறையான பராமரிப்பின்றி மிகவும் பாழடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த பழைய கட்டிடம், தற்போது செடி, கொடிகள் மண்டி சுவர்கள் மற்றும் கூரைகள் விரிசலடைந்து சேதமடைந்துள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் மாளிகையை இடித்து அகற்ற வேண்டும்.