செஞ்சியை அடுத்த பொன்பத்தி ஏரியில் வண்டல் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி சிலர் அளவுக்கு அதிகமாக தோண்டி செம்மண் எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் குறைவது மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.