திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட வட்டார பொது சுகாதார கட்டிடம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி புதிய பொது சுகாதார கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமா?
-வெற்றி, பெரணமல்லூர்.