ஒடுகத்தூரில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் பலர் படித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபானம் குடிப்பவர்கள் போதையில் பள்ளி அருகில் உள்ள சாலைகளிலேயே விழுந்து கிடப்பது வாடிக்கையாகி விட்டது. அதில் சிலர் அரைகுறை ஆடைகளுடன் சாலைகளில் கிடப்பதால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், முகம் சுளிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
-ராமமூர்த்தி, ஒடுகத்தூர்.