பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-07-26 18:37 GMT

திமிரி, காவனூர் வழியாக பாலமதி, வேலூர் செல்லும் பஸ்கள் மற்றும் திமிரி, காவனூர், கண்ணமங்கலம் வழியாக வேலூர் செல்லும் பஸ்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக தான் சென்று வர வேண்டும். காவனூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராம மக்கள் காவனூர் சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும் என்றால் காவனூர் பஸ் நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும் எனவே காவனூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நிழற்குடை அமைத்தால் முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பரமசிவம், திமிரி.

மேலும் செய்திகள்