பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிப்பார்களா?

Update: 2026-09-06 19:24 GMT

திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி, அரசினர் மேல்நிலைப்பள்ளி என பல பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தூய்மைப் பணியாளரை அரசு நியமித்தால் கழிவறை வசதியை நன்கு பராமரிக்கலாம். ஆகையால், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிப்பார்களா?

-சிவலிங்கம், திமிரி. 

மேலும் செய்திகள்