காட்பாடி தாலுகா பொன்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளில் சமீப காலமாக அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும்போது குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் குரங்குகளுக்காக வனப்பகுதியில் தண்ணீர் ெதாட்டி கட்ட வேண்டும்.
-ஏகாம்பரம், பொன்னை.