திருப்பூரை அடுத்த பட்டாம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியினரின் பயன்பாட்டுக்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் புதர்மண்டி காணப்படுகிறது. சுகாதாரமின்றி கிடக்கும் இந்த சுகாதார வளாகம் தற்போது பழுதடைந்து பரிதாப நிலையில் உள்ளது. இதனால் பொது மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
-பிரேமா, பெருமாநல்லூர்.