ஈக்கள் தொல்லைக்கு மருந்து தெளிக்க வேண்டும்

Update: 2026-06-07 19:37 GMT

வேலூரில் மா, பலா பழ சீசனாக உள்ளது. பழைய, புதிய பஸ் நிலையங்களில் மா, பலா பழம் விற்பனை அதிகமாக நடக்கிறது. அங்கு ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதேபோல் தின்பண்ட கடைகளில் ஈக்கள் மொய்ப்பது அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பல கடைகளில் ஈக்கள், கம்பிகள், ஒயர்கள், டீ டம்ளர்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டமாக அமர்ந்துள்ளன. ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குருமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்