குளம் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2025-06-08 19:03 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் பகுதியில் கண்ணான் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் வீசப்படுகின்றன, குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளத்தில் உள்ள மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தில் கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

-நடராஜன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்