திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையோரம் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமென்றாலும் சாய்ந்து, கீழே விழ வாய்ப்பு உள்ளது. இந்த மரத்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கஜேந்திரன், திருப்பத்தூர்.