வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அரசு கட்டிய கழிவறைகள், குளியல் அறைகளில் போதிய தண்ணீர் வசதி இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் கழிவறைகள், குளியல் அறைகளை சரியாகப் பராமரிப்பது இல்லை. இதனால், மக்கள் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். கழிவறைகள், குளியல் அறைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், சமூக ஆர்வலர், மீசநல்லூர்.