கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்

Update: 2023-10-01 17:13 GMT

செங்கம் தாலுகா விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பி மக்கள் வாழ்கின்ற பகுதியாகும். செங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தற்போது கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்தக் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

-கு.ராஜாராம், செங்கம்.

மேலும் செய்திகள்