ஆண்டிப்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் உள்ளிட்டோர் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.