தேனி அன்னஞ்சி ஊஞ்சாம்பட்டி கிழக்கு ரத்னாநகர் பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.