திமிரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது எக்ஸ்ரே நிலையத்தில் பணியாற்றி வந்தவர் மேல் படிப்புக்காக சென்று விட்டார். ஆகையால், சுமார் கடந்த ஒரு ஆண்டாக எக்ஸ்ரே நிலையம் பூட்டியே இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எக்ஸ்ரே நிலையம் மீண்டும் செயல்பட வைப்பார்களா?
-தாமரைசெல்வன், திமிரி.