பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2023-09-20 17:41 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சந்தை மைதானம் அருகே திருப்பத்தூர்-வாணியம்பாடியை நோக்கி செல்லும் சாலையோரம் தொலைத்தொடர்புத் துறையினர் 6 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளம் இதுநாள் வரை மூடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும்.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்