ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-11-06 11:45 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கட்டிடங்களுக்கு முன்பாக உள்ள சில கடைகள் 15 அடிக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். புதிய பஸ் நிலையம் திரும்பும் இடத்தில் உள்ள கடைகள் 10 அடிக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், தனியார் பள்ளி வாகன ஓட்டிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் சிரமப்படுகின்றனர். வாகனத்தை ஓட்டி செல்ல அவதிப்படுகின்றனர். பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. பேரூராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்