வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் எதிரே மைதானம் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதி விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீேழ விழலாம். அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலையில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தராஜ், வேலூர்.