பாஸ் புத்தகத்தில் பதிவு செய்து தர வேண்டும்

Update: 2023-01-01 17:28 GMT

பாணாவரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் பலர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை விவரங்களை பதிவு செய்ய சேமிப்பு கணக்கு (பாஸ் புத்தகம்) புத்தகத்தில் கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாளரின் பண பரிமாற்ற விவரங்களை அச்சுப்பதிவு செய்து தராமல் உள்ளனர். வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கி அதிகாரிகள் சேமிப்பு கணக்கு புத்தகத்தில் பண பரிமாற்ற விவரங்களை பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்புச்செல்வன், வீரராகவபுரம்.

மேலும் செய்திகள்