வேலூர் சதுப்பேரி ஏரி படகு குழாம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் மீது கனரக வாகனம் சென்றதால் உடைந்து விட்டது. விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதி மக்கள் பள்ளத்தின் முன்பு கற்களை அடுக்கி வைத்துள்ளனர். உடைந்த சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்வார்களா?
-கஜேந்திரன், சதுப்பேரி.