வாலாஜா தாசில்தார் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் குளக்கரை உள்ளது. கரையைச் சுற்றிலும் நடைபாதை உள்ளது. நடைபாதை முழுவதும் மாடுகள் நடமாடும் இடமாக மாறி விட்டது. இதனால் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வோருக்கு இடையூறாக உள்ளது. வாலாஜா நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடைபாதையை சுத்தம் செய்து பராமரிக்குமா?
-பாரி, வாலாஜா.