விளாப்பாக்கம் ஏரிக்கு நீர் வரும் கால்வாய் பாலமதி அடிவாரத்தில் தொடங்கி மிக ஆழமாகவும், அகலமாகவும் விளாப்பக்கம் ஏரியில் வந்தடையும். ஆனால், இன்று ஏரி கால்வாய் முழுவதுமாக சுருங்கிபோய் விட்டது. இதனால் கால்வாயில் மழைநீர் வருவதில்லை. விவசாயம் பாதிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளாப்பாக்கம் ஏரிக்கு வரும் கால்வாயை அகலப்படுத்தி ஆழமாக சீர் செய்து நீர் வர வழி வகை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆறுமுகம், விளாப்பாக்கம்.