சோளிங்கரில் காந்தி, அண்ணாசாலை, பஸ் நிலையம் வரை சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்பு கடைகளும், இருசக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சோளிங்கரில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடக்கின்றன. மேற்படி சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.