சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் 3-வது வார்டு பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர நடவடிக்கை தேவை.