மொடக்குறிச்சி பேரூராட்சி 3-வது வார்டில் காமராஜர் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். விரைவில் எங்கள் பகுதியில் சிமெண்டு கான்கிரீட் தளம் அமைத்து, மின்விளக்கு வசதி செய்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.