வாலாஜா நகராட்சியில் 24 வார்டுகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இரவில் வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் வீடுகளுக்கு வரும்போது, சாலையில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகர், வாலாஜா.