திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மைக்காமேடு பகுதி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் ஒன்று இருந்தது. அது, பழுதடைந்ததால் புதிய நிழற்கூடம் கட்டுவதற்காக அதை இடித்து அகற்றி விட்டனர். இடிக்கப்பட்ட இடத்தில் இன்னும் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டவில்லை. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பயணிகள், கிராம மக்கள் நிழலுக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.