பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியையொட்டி கிராமப்புற ஊரக நூலக கட்டிடம் ரூ.2.85 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த நூலக கட்டிடம் பழுதானதால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து விட்டது. இந்த கட்டிடத்தை சுற்றி, புதர் மண்டிக்கிடப்பதால், விஷ பூச்சிகளின் கூடாரமாகவும் மாறிப்போனது. பெரிய மழை பெய்யும்போது கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.