சமூக விரோதிகளின் கூடாரம்

Update: 2026-08-16 13:50 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் நாரவாரி குப்பம், வேணுகோபால்சாமி கோவில் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அரசு குழந்தைகள் பால்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கோவில் வளாகத்திற்குள் ஏராளமானோர் மது அருந்துவது மற்றும் சீட்டு விளையாடுவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்