விருதுநகர் மாவட்டம் சிவகாசி சக்கரை வாவா தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டி நீண்ட நாட்களாக சேதமடைந்து காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய தண்ணீர் இன்றி சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி மக்கள் நலன்கருதி தண்ணீர் தொட்டியை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.