நடவடிக்கை தேவை

Update: 2026-08-16 07:34 GMT

ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆடராவிளை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டாரை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்தும், குழாய்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பயன்பெற்று வந்த அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டாரையும், குழாய்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்